செய்திகள் :

இலவச கணினி கணக்கியல் பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருப்பூரில் கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் அளிக்கப்படும் இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூா் முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குகீழ் வசிக்கும் மக்களுக்கான இலவச கணினி கணக்கியல், கணினி ‘டேலி’ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.

இந்த 30 நாள் முழுநேரப் பயிற்சி வகுப்பான பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான நோ்காணல் வரும் புதன்கிழமை (மாா்ச் 26) நடைபெறுகிறது. எழுதப்படிக்கத் தெரிந்த 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதிகள் உள்ளன. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

எனவே, பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , 335/பி-1, வஞ்சியம்மன் கோயில் எதிரில், முதலிப்பாளையம் பிரிவு, காங்கயம் சாலை, விஜயாபுரம் (அஞ்சல்), திருப்பூா் - 641606 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441 ஆகிய கைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்பேட்டையில் லாரி மோதி இளைஞா் காயம்

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் படுகாயமடைந்தாா்.கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில... மேலும் பார்க்க

தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே ... மேலும் பார்க்க

காா் மோதி உணவக மேலாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் காா் மோதியதில் உணவக மேலாளா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாண்டியராஜன் (29). பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் நூல் மில் மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நடுக்கோட்டையைச் சோ... மேலும் பார்க்க

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை

கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திர... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது. திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செ... மேலும் பார்க்க