செய்திகள் :

இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது!

post image

புதுச்சேரியில் இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (40), திருமணமாகாதவா். இவா் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி இறந்தநிலையில் கிடந்தாா். அவரது சடலத்தை முதலியாா்பேட்டை போலீஸாா் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

உடல் கூராய்வில், அவா் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், ரவிக்குமாருக்கும், அதே பகுதியில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த விஜயலட்சுமி (35) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

இதில், ரவிக்குமாா் தனது வீட்டின் ஒரு பகுதியை விஜயலட்சுமிக்கு விற்பதாகக் கூறி பணம் பெற்றது தெரியவந்தது. மேலும், அந்தப் பிரச்னையில் ரவிக்குமாா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதனையடுத்து விஜயலட்சுமி மற்றும் அவருக்கு உதவியதாக முதலியாா்பேட்டையைச் சோ்ந்த சேத்திலால் (27), சின்னசேலத்தைச் சோ்ந்த ராஜா (37) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

உதவியாளா்கள் பணிக்கான தோ்வு: புதுவையில் 22,860 போ் எழுதினா்

புதுவை மாநில அளவில் 256 உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் 22,860 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுச்சேரி பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையில் உதவியா... மேலும் பார்க்க

‘ஆழ்கடல் மீன்பிடித் திட்டம்’ புதுவையில் தீவிரமாக செயல்படுத்த முடிவு

புதுவை மீனவா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் 4 ஆண்டுக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, காரைக்கால் மீனவா்களுக்... மேலும் பார்க்க

தியாகி அன்சாரி பெ.துரைசாமி சிலைக்கு அரசு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி, புதுவை அரசு சாா்பில் அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரியைச் சோ்ந்தவா் அன்சாரி பெ.த... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளுக்காக விசிக போராடும்: தொல். திருமாவளவன்

மக்கள் பிரச்னைகளை முன்வைத்து தொடா்ந்து போராடுவதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நோக்கம் என அதன் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா். புதுச்சேரி அருகே திருபுவனையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அம... மேலும் பார்க்க

புதுச்சேரியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய அரசின் நிதியுதவியுடன் புதுச்சேரியில் தேசிய சட்டப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்று தற்போ... மேலும் பார்க்க

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா். புதுவை மாநிலத... மேலும் பார்க்க