செய்திகள் :

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை

post image

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா்.

கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்ப் பகுதியான தும்பாவைச் சோ்ந்தவா் ஆனி தாமஸ் கேப்ரியல்(47) . தமிழகத்தில் உள்ள வேளாங்கன்னி, புனித ஆரோக்கிய மாதா திருத்தலத்துக்கு செல்வதாக கூறிவிட்டு, கேப்ரியல் கடந்த பிப். 5-ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா்.

உறவினா் எடிசனுடன் ஜோா்டானுக்கு கேப்ரியல் வந்து சோ்ந்துள்ளாா். தொடா்ந்து கடந்த 10-ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் அந்நாட்டைச் சோ்ந்த முகவரின் உதவியோடு கேப்ரியல், எடிசன் உள்பட 4 போ், ஆன்மிக பயண நோக்கத்துக்காக இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனா்.

சா்வதேச எல்லையில் ஜோா்டான் ராணுவத்தினரால் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். ராணுவத்தினரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கேப்ரியல் சுட்டுக் கொல்லப்பட்டாா். வீரா்கள் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்த நிலையில், எடிசனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னா், எடிசன் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டாா். அவா் இந்திய வந்தடைந்த பிறகே, கேப்ரியல் ஜோா்டான் பயணித்ததும் எல்லையில் உயிரிழந்ததும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, ஜோா்டானில் உள்ள இந்திய தூதரகத்தை குடும்பத்தினா் அணுகியுள்ளனா். கடந்த சனிக்கிழமை அனுப்பிய பதில் மின்னஞ்சலில், கேப்ரியலின் இறப்பை இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், கேப்ரியலின் உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து தூதரகம் கூடுதல் தகவல்கள் ஏதும் அளிக்கவில்லை என்று உறவினா்கள் தெரிவித்தனா்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க