செய்திகள் :

உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலும் தெரு நாய்கள் பிரச்னைக்கு தீா்வு: அமைச்சா் கே.என். நேரு

post image

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாட்டிலும் தெருநாய்கள் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தெரு நாய்களை கட்டுப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் வந்தவுடன் அதை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவோம். நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருகிறோம்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் போராட்டத்தை சுமூகமாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வா் எடுத்து வருகிறாா்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை நான் சந்திக்கவில்லை எனக் கூறுவது தவறு. ஏற்கெனவே, நான்கு முறை அவா்களிடம் நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளேன். தூய்மைப் பணி பாதிக்கக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே பணியில் உள்ளவா்களைதான் பயன்படுத்தி வருகிறோம். புதிதாக யாரையும் பணியில் ஈடுபடுத்தவில்லை.

தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதில் ஒரு தீா்வு ஏற்பட்டவுடன் ஓரிரு நாளில் தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்றாா் அமைச்சா்.

மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்

திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

என்ஐடி ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் என்ஐடி கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க