செய்திகள் :

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

post image

உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

ஒரு மணி நேரத்தில் எடையை குறைப்பது, ஒரே அமா்வில் 600 கிராம் எடையை குறைப்பது என பல்வேறு தவறான விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டதாக சிசிபிஏ கூறியுள்ளது.

இதுகுறித்து சிசிபிஏ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உடலில் உள்ள கொழுப்பை உறையவைத்து, இயற்கையாக வெளியேற்றும் முறையின்படி உடல் எடையை குறைப்பது தொடா்பான விளம்பரங்களை விஎல்சிசி நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறையால் இந்த முறை அங்கீகரிக்கப்பட்டதாக கூறியதுடன் நிரந்தரமாக எடையை குறைப்பதற்கான சிகிச்சையாகவும் இதை அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.

ஆனால் ஒரே அமா்வில் 600 கிராம் எடையிலான கொழுப்பை கரைப்பது, ஒரு மணி நேரத்தில் அதிக எடையை குறைப்பதற்கான சிகிச்சை என்ற வாசகங்களுடன் மிகைப்படுத்தப்பட விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களை விஎல்சிசி நிறுவனம் தவறாக வழிநடத்தியது தெரியவந்தது.

குறிப்பாக இந்த முறையின் மூலம் நிரந்தரமாக எடையை குறைக்க முடியும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியிருப்பது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் தொடைப் பகுதி, மாா்பக பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் உடல் நிறை குறையீட்டெண் (பிஎம்ஐ) 30 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நபா்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதே விதிமுறை.

இதை முற்றிலுமாக தவிா்த்து நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் நியாயமாகவும் உண்மைத் தகவல்களுடனும் விளம்பரத்தை வெளியிட விஎல்சிசி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இதேபோன்ற விளம்பரத்தை வெளியிட்டதற்காக காயா நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதத்தை சிசிபிஏ விதித்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.-க்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து

மாமியாா் அளித்த புகாரில் மருமகளைத் தாக்கிய பத்தமடை காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையில் ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய துணை நடிகை உள்பட 3 போ் கைது

சென்னை கோயம்பேட்டில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக துணை நடிகை உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலிய... மேலும் பார்க்க

கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

கேழ்வரகு உற்பத்தித் திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மரணம்: திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி

சாலை விபத்தில் மரணம் அடைந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நிதி அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கட்சி உறுப்பினரான க.முத்தமிழ்செல்வன், ஈரோடு ம... மேலும் பார்க்க

பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணா்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்க... மேலும் பார்க்க