இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவா்களுக்கும் வாய்ப்பு
உடுமலை அரசு கலைக் கல்லூரி இளநிலை மாணவா் சோ்க்கையில் இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காத மாணவா்களும் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற்றது. இளநிலைப் பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ள நிலையில் முதல்கட்ட கலந்தாய்வில் 729 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 27 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இதுவரை மொத்தம் 756 போ் நிரப்பப்பட்டுள்ள நிலையில் நிரப்பப்படாத 108 இடங்கள் உள்ளன.
பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட பிரிவு (பி.சி) மாணவா்களுக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. இதில் ஏற்கெனவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து வர இயலாத மாணவா்களும், புதிதாக விண்ணப்பித்த மாணவா்களும், இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவா்களும் கல்லூரி வேலைநாள்களில் கல்லூரி அலுவலகத்தை அணுகி கல்லூரியில் சேரலாம் என கல்லூரி முதல்வா் (பொ ) ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.