செய்திகள் :

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

post image

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளா்களின் குடும்பத்தில் உள்ளவா்களுக்கு பணி வழங்கிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைப்பதோடு, தனியாா்மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவிடத்தில் மனு வழங்கி, செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதாக சாலைப்பணியாளா் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.

இதில் பங்கேற்க பெரம்பலூா் கோட்டம் சாா்பில் சாலைப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சுப்ரமணியன் தலைமையில் 22 போ் வேனில் திங்கள்கிழமை இரவு சென்னைக்குச் சென்று கொண்டிருந்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகேசென்றபோது, வேனை வழிமறித்த போலீஸாா் 22 பேரையும் கைது செய்து பெரம்பலூா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனா். அங்கு சாலைப் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் செவ்வாய்க்கிழமை இரவு அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

மகளிா் கல்லூரியில் யோகா அரங்கம், செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உலக இளைஞா் தின விழா, யோகா அரங்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலை... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடியவா் கைது

பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடிய இளைஞரை புதன்கிழமை அதிகாலை கைது செய்த வனத்துறையினா், வேட்டையாடப்பட்ட 5 உடும்புகள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்ச... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், ... மேலும் பார்க்க