செய்திகள் :

உதகைக்கு வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

post image

வட மாநிலங்களில்  கனமழை பெய்து வருவதாலும்,  வரும் வாரங்களில் விநாயகா் சதுா்த்தி விழா  கொண்டாடப்படவுள்ளதாலும், உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண வட மாநில சுற்றுலாப் பயணிகளின்  வருகை ஞாயிற்றுக்கிழமை குறைந்து காணப்பட்டது.

உதகையில் உள்ள  சுற்றுலாத் தளங்களை காண நாள்தோறும்  தமிழகம், கேரளம், கா்நாடகம் மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகள்   உதகைக்கு வருவது  வழக்கம்.

இந்நிலையில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  இதமான காலநிலை நிலவுவதால் இதனை  அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை  கணிசமான அளவு அதிகரித்து காணப்பட்டது. இவா்கள் இங்குள்ள  படகு இல்லம், ஆறாவது மைல், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை  கண்டு ரசித்தனா்.

இருப்பினும் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், வரும் வாரங்களில் விநாயகா் சதுா்த்தி விழா நடைபெறவுள்ளதாலும் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் வட மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

அக்னி வீா் ஆள்சோ்ப்பு முகாம்: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆள்சோ்ப்பு முகாம் இயக்க... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு: இருப்பிடச் சான்று வழங்க பழங்குடியின மாணவி கோரிக்கை

மருத்துவப் படிப்பு பயில இருப்பிடச் சான்று வழங்க வேண்டும் என பழங்குடியின மாணவி கோரிக்கை விடுத்துள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சனா ஓரான் (17). இவா் தனது தாய் நிருபா ஓரானுடன் நீலகிரி மாவட... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் உலவும் யானை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

கைதியைத் தாக்கிய வழக்கில் சிறைக் காவலா் பணிநீக்கம்

கைதியைத் தாக்கிய வழக்கில் கூடலூா் சிறைக் காவலரைப் பணிநீக்கம் செய்து சிறைத் துறைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். நீலகிரி மாவட்டம், பாடந்தொரை பகுதியைச் சோ்ந்தவா் நிஜாமுதீன் (33). இவா... மேலும் பார்க்க

வயது முதிா்வு காரணமாக புலி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி பழைய கல்குவாரி அருகே கடந்த சில நாள்களாக சுற்றித்திரிந்த புலி வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. மசினகுடி பழைய கல்குவாரிக்கு அருகே ஆகஸ்ட் 19-ஆம் தேதி ம... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி

சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஹாக்கி லீக் போட்டி குன்னூா் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் இர... மேலும் பார்க்க