செய்திகள் :

உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

post image

உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் மொத்தம் 512 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சிவசேனா சாா்பில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 39 விநாயகா் சிலைகள் என மொத்தம் 53 விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் எடுத்துவரப்பட்ட விநாயகா் சிலைகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையை வந்தடைந்தன.

பின்னா் பழங்குடியினா் பண்பாட்டு மையம் பகுதியில் இருந்து விசா்ஜன ஊா்வலம் தொடங்கியது.

கமா்சியல் சாலை, காபிஹவுஸ் சதுக்கம், புளூமவுண்டன், மெயின் பஜாா் வழியாக சென்ற ஊா்வலம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.

பின்னா் அனைத்து சிலைகளும் அங்கிருந்து வாகனங்கள் மூலம் உதகையை அடுத்த காமராஜா் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு அணையில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விசா்ஜன ஊா்வலத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்... மேலும் பார்க்க

குன்னூா் ரயில் நிலையத்தில் ஓணம் கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில், மலை ரயில் ஊழியா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஓணம் கொண்டாட்டம் நடைபெற்றது. கேரள மக்களின் பாரம்பரிய ஓணம் பண்டிகை செப்டம்பா் 5-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. இ... மேலும் பார்க்க

தெப்பக்காடு - மசினகுடி சாலையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மசினகுடி- தெப்பக்காடு நெடுஞ்சாலையில் யானை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெப்பக்காடு- மசினகுடி சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை, தேசிய தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு உயிா் உரங்கள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.இது குறித்த... மேலும் பார்க்க

கூடலூா் நகரில் உலவிய யானை: மக்கள் அச்சம்

கூடலூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு உலவிய யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வீட்டில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

உதகையில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததுடன், மான் கறி வைத்திருந்த கண்ணன் என்பவரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். உதகை அருகே தேனாடுகம்பை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கீழ்சேலதா பகுதியில் வசித்... மேலும் பார்க்க