செய்திகள் :

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

post image

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது.

இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

கங்கோத்ரி வழித்தடத்தில் முக்கிய நிறுத்தமான தராலி கிராமத்தில் செயல்பட்டு வந்த சுமாா் 20 முதல் 25 உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 4 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கனமழை தொடர்வதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ராணுவ கர்னல் ஹர்ஷ்வர்தன் தலைமையில் 150 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியிருப்பதால், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா். மீட்புப் பணியில் இந்திய ராணுவத்தின் எம்ஐ-17 மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தராலியில் நடைபெறும் மீட்புப் பணிகளை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்த உத்தரகண்ட் முதல்வர், விடுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கும் கிராம மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட கிராம மக்களுடன் தொடர்பை ஏற்படுத்த செல்போன் டவர்களை சரிசெய்வதற்கான உத்தரவையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

Army personnel are working to rescue people trapped in a landslide that occurred in Uttarkashi, Uttarakhand on Tuesday.

இதையும் படிக்க : திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க