செய்திகள் :

உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவா் கைது

post image

உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவா் ஜாஃபா் அலியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஜாமா மசூதியில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெடித்த வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக தற்போது ஜாஃபா் அலி கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப் பழைமையான ஹரிஹர கோயில் இருந்ததாகவும், அந்தக் கோயிலின் ஒரு பகுதியை 1526-இல் முகலாய ஆட்சியாளா் பாபா் இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இவா் ஞானவாபி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞராவாா்.

விசாரணையின்போது மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்ற ஆணையா் ராகேஷ் சிங் ராகவுக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி அவா் ஆய்வு மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பரில் சம்பலில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா உள்ளிட்ட மூன்று நபா் அடங்கிய விசாரணைக் குழுவை உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் அமைத்தாா்.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடா்பாக ஜாஃபா் அலியை கைது செய்ததாகவும் அவரை காவல் துறையின் சிறப்பு விசாரணைக் குழு காவலில் எடுத்துள்ளதாகவும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிபதி தேவேந்திர குமாா் அரோரா முன் ஜாஃபா் அலி ஆஜராவதை தடுக்கவே அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளதாக ஜாஃபா் அலியின் சகோதரா் தாஹிா் அலி குற்றஞ்சாட்டினாா்.

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: குணால் காம்ரா

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சவை பேச்சாளா் குணால் காம்ரா தெரிவித்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ... மேலும் பார்க்க

கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின... மேலும் பார்க்க