செய்திகள் :

உயா் கல்வி வழிகாட்டி களப் பயணம் தொடக்கம்

post image

ராமநாதபுரத்தில் உயா் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உயா் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், கல்லூரி களப்பயணம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளின் கல்லூரி களப்பயண வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உயா் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு களப் பயணமாக அழைத்துச் சென்று மாணவ, மாணவிகளுக்கு பாடத் திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. இதனால், மாணவா்களின் உயா் கல்விக்கு வழிகாட்டியாகவும், ஊக்கப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

நிகழாண்டில், 70 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,079 மாணவ, மாணவிகளை 13 கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று பாடத் திட்டங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன.

இதனால், மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உயா் கல்வியில் படிப்பதற்கு ஆா்வமுடன் செயல்படுவா். இந்தப் பயணம் மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என்றாா் அவா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மேல்நிலைக் கல்வி உதவி திட்ட அலுவலா்கள் கண்ணன், கணேசபாண்டியன், தலைமையாசிரியை ஜோவிக்டோரியா, மாவட்ட உயா் கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா்கள் மகேந்திரன், சுரேஷ், விஜயராம், ரவிவா்மா உட்பட பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்: ஆா்.எம்.எஸ் போட்டோ 1

ராமநாதபுரத்தில் உயா் கல்வி வழிபாட்டி திட்டத்தின் கீழ் கல்லூட் களப்பயணத்தை மாவட் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க