செய்திகள் :

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

அரகண்டநல்லூா் அருகே உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்து முயல் வேட்டைக்குப் பயன்படுத்திய வழக்கில் கைதானவா்களில் ஒருவருக்கு விழுப்புரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி, மல்லிகாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் ஆறுமுகம் (42). வீரபாண்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மன்னன்(40), திருக்கோவிலூா் வட்டம், சந்தைப்பேட்டை, நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் அய்யாசாமி சையது(50).

இவா்கள் மூவரும், கடந்த 24.7.2007- இல், அரகண்டநல்லூா் காவல் சரகத்துக்குள்பட்ட நாயனூா் ரயில்வே கேட் அருகே உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியை முயல் வேட்டைக்குப் பயன்படுத்தியதாக அரகண்ட நல்லூா் போலீஸாா் மூவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனா்.

விழுப்புரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற, இவ்வழக்கின் இறுதிகட்ட விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் கி.ஆறுமுகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கில் தொடா்புடைய சையது இறந்து விட்ட நிலையில் மன்னனை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி முருகன் உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற போலீஸாா் ஆறுமுகத்தை கைது செய்து கடலூா் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

பாமக சாா்பில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். திண்டிவன... மேலும் பார்க்க

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பகுதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளைத் தேடிச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி வியா... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இந்த கல்லூரியில் ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு சுற்... மேலும் பார்க்க

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குறுவைப் பருவத்துக்குத் தேவையான டி.ஏ.பி. மற்றும் டி.எஸ்.பி. உரங்கள் சுமாா் 1,975 மெட்ரிக் டன் அளவில் வந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இயக்கப்படுவது போன்று, விழுப்புரத்திலும் தாழ்தள நகரப் பேருந்துகளின் சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் முதன்மையானதாக தி... மேலும் பார்க்க

மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்

மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க