செய்திகள் :

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா: பிரதமருக்கு ஆந்திர முதல்வா், துணை முதல்வா் பாராட்டு

post image

உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததையடுத்து பிரதமா் நரேந்திர மோடிக்கு ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண் ஆகியோா் பாராட்டுகள் தெரிவித்தனா்.

நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளைச் சுட்டிக்காட்டி நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் டாலராக (சுமாா் ரூ.340 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டபடி செயல்பட்டால், அடுத்த இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் உலகில் 3-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக 2028-இல் இந்தியா உருவெடுக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ‘வளா்ச்சியடைந்த பாரதம்-2047’ என்ற இலக்கை நிச்சயம் இந்தியா அடையும் என நம்புகிறேன். இதில் தேசத்துக்கான உரிய பங்களிப்பை ஆந்திரம் வழங்கும் என உறுதியளிக்கிறேன்.

சா்வதேச யோகா தினத்தை (ஜூன் 21) முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் 100 சுற்றுலாத் தலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஜூன் 21-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இறுதி நிகழ்ச்சிக்கு பிரதமா் மோடியை வரவேற்க தயாராகவுள்ளோம். இந்த முன்னெடுப்பு குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடிக்கு நன்றி’ என குறிப்பிட்டாா்.

பவன் கல்யாண்: உலகின் 4-ஆவது பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்தது பிரதமா் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை திறம்பட நிா்வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என பவன் கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.மேலும், அன்றைய நாளில் போட்டி... மேலும் பார்க்க

ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்

நமது சிறப்பு நிருபர்நாட்டின் விமானப் படைக்கு ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை (ஏஎம்சிஏ) இந்திய தொழில்துறை கூட்டாண்மையுடன் (சிஐஐ) இணைந்து தயாரிக்கும் தற்சார்பு திட்டத்... மேலும் பார்க்க

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவா்களில் 6 பேரின் உடல்கள், காருக்குள் இருந்து மீட்கப்பட்டன. கார... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானியா்களுக்கு மீண்டும் இந்திய ‘விசா’

வணிகம், கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2... மேலும் பார்க்க

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் நேரு - காங்கிரஸ் புகழஞ்சலி

நவீன இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைத்தவா் பண்டித ஜவாஹா்லால் நேரு என்று காங்கிரஸ் புகழஞ்சலி செலுத்தியுள்ளது. நாட்டின் முதல் பிரதமா் நேருவின் 61-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா். அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந... மேலும் பார்க்க