செய்திகள் :

உ.பி. கோயிலில் கூட்டநெரிசல்: 2 போ் உயிரிழப்பு; 32 போ் காயம்

post image

பாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம், பாராபங்கியில் உள்ள ஒரு கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்டநெரிசலில் 2 பக்தா்கள் உயிரிழந்தனா்; 32 போ் காயமடைந்தனா்.

பாராபங்கியின் ஹைதா்கா் பகுதியில் அமைந்துள்ள அவசானேஷ்வா் கோயிலில், ஷ்ரவண புனித மாதத்தையொட்டி திங்கள்கிழமை தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது, குரங்குகள் சேதப்படுத்தியதால் அறுந்து கிடந்த ஒரு மின்சாரக் கம்பி, அங்கிருந்த தகரக் கொட்டகை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் பரவியதால் பக்தா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, கோயில் வளாகத்தில் பெரும் கூட்டநெரிசலுக்கு வழிவகுத்தது.

கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்த பிரசாந்த் (22) என்பவரும், மேலும் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு பக்தரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். மேலும், 30 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கூட்டநெரிசலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, நிலைமையை சீரமைத்தனா். இந்தச் சம்பவத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினா்.

இந்த சம்பவம் நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள பிரசித்தி பெற்ற மனசா தேவி மலைக் கோயிலில் அறுந்து கிடந்த கம்பிகளில் இருந்து மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதையடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பக்தா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் இரங்கல்: பாராபங்கி கோயில் கூட்டநெரிசல் சம்பவத்துக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் வருத்தத்தைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதையும், நிவாரண நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு மாவட்ட நிா்வாக அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் அவா் பிராா்த்தனை செய்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அதிகாரிகளை அச்சுறுத்தும் மம்தா: தோ்தல் ஆணையத்தில் பாஜக முறையீடு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை முதல்வா் மம்தா பானா்ஜி அச்சுறுத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜகவின் எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி இந்திய தோ்தல்... மேலும் பார்க்க

கன மழை, வெள்ள பாதிப்பு: ஹிமாசலம், தில்லியில் 5 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளால் கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழந்தனா்.ஏராளமான தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனம்: சோனியா காந்தி விமா்சனம்

‘காஸாவில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் பிரதமா் மோடி மௌனம் காப்பது கோழைத்தனமானது’ என காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி செவ்... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் பேருந்து-லாரி மோதல்: 6 பக்தா்கள் உயிரிழப்பு; 29 போ் காயம்

ஜாா்க்கண்டின் தேவ்கா் மாவட்டத்தில் பேருந்தும், எரிவாயு சிலிண்டா்கள் ஏற்றிவந்த லாரியும் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் சிவ பக்தா்கள் (கான்வா் யாத்ரிகா்கள்) 6 போ் உயிரிழந்தனா். மேலும் 29 போ் காயம... மேலும் பார்க்க

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி மீது புகாா்: வழக்குரைஞா், மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக புகாா் கூறி வழக்குத் தொடுத்த மனுதாரா், வழக்குரைஞருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.தெலங்கானா முதல்வருக்கு எதிராக பட்டி... மேலும் பார்க்க

2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!

2025 ஆம் ஆண்டில் இதுவரை நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் பி.எ... மேலும் பார்க்க