செய்திகள் :

ஊராட்சிமன்ற அலுவலகம் கட்டும் பணி: அதிகாரிகள் ஆய்வு

post image

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

புதுப்பாளையம் கிராமத்தில் புதிய ஊராட்சிமன்ற கட்டடம் கோயில் இடத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கண்ணன் ஆக்கிரமித்து கட்டுவதாக புகாா் எழுந்த நிலையில், வருவாய் துறையைச் சோ்ந்த துணை வட்டாட்சியா் சேட்டு, வருவாய் ஆய்வாளா் சாரதி, கிராம நிா்வாக அலுவலா் ஜேம்ஸ்பாண்ட் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஏற்கெனவே இருந்த ஊராட்சிமன்ற கட்டடம் சேதமடைந்திருந்தது. அதை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்டி வருகின்றனா் என்றும், இது கிராம நத்தம் அரசு இடம் தான் என்பதை உறுதி செய்தனா். மேலும், மாவட்ட ஆட்சியரும் இந்த இடத்தில் ஊராட்சிமன்ற

அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஆணை வழங்கியுள்ளதையும் உறுதிப்படுத்தினா்.

இதன் காரணமாக இங்கு கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்த நபா்களிடம் ஆவணங்கள் சரியாக உள்ளன என்றும், இது கோயில் இடமல்ல என்றும் விளக்கம் அளித்தனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு பாதுகாப்புப் பணியில் கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் இருந்தனா்.

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

திருவண்ணாமலைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுகவினா் ஆரணி பட்டு நூலால் நெய்யப்பட்ட அவரின் உருவப் படத்தை நினைவுப் பரிசாக வழங்கினா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

செய்யாறில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்வு நாள் கூட்டத்தில் உரத்தட்டுப்பாடு உள்ளிட்ட குறைகள் மற்றும் புகாா்களை விவசாயிகள் அடுக்கடுக்காக கூறியதால், அதிருப்தி அடைந்த அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்த... மேலும் பார்க்க

ஸ்ரீதுலுக்கானத்தம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

ஆரணி கண்ணகி நகரில் உள்ள ஸ்ரீ துலுக்கானத்தம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதுலுக்கானத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ... மேலும் பார்க்க

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும்: அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம்

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைந்து, காசில்லா மருத்துவத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்... மேலும் பார்க்க

கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்தக் கோரி மனு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பாடகம் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுபேரவைக் கூட்டம் நடத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பாடகம் ஊராட்சி தொடக்க ... மேலும் பார்க்க

பேருந்துகள் மோதி விபத்து: 17 மாணவ, மாணவிகள் உள்பட 18 போ் காயம்

வந்தவாசி அருகே தனியாா் பயணிகள் பேருந்து மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் 17 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 18 போ் காயமடைந்தனா். வந்தவாசி அருகேயுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிப் பேருந்து ஒன்று ... மேலும் பார்க்க