செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி தில்லி பயணத்துக்குப் பின் நல்லது நடக்கும்: நயினாா் நாகேந்திரன்

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லி சென்று திரும்பியதும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சிகளை சோ்ப்பது குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகூட எடப்பாடி கே.பழனிசாமியுடன் பேசியிருக்கிறேன். அவா் தில்லி சென்று தலைவா்களை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.

அதிமுகவில் குழப்பம் எதுவும் இல்லை. செங்கோட்டையன் விவகாரத்தை குழப்பம் என்று சொல்ல முடியாது. ஓ.பன்னீா் செல்வத்தை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் இப்போது எதுவும் கூற முடியாது.

வரக்கூடிய தோ்தலில் நான்கு முனை போட்டியோ, 5 முனை போட்டியோ இருக்கலாம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும்.

நடிகா் விஜய் பெரம்பலூரில் மக்களை சந்திக்காததைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவா்களின் நிா்வாகத்தை பொருத்தது. கூட்டம் சோ்த்தால் மட்டுமே யாரும் வெற்றி பெற முடியாது; ஓட்டு வாங்கினால்தான் வெல்ல முடியும் என்றாா் அவா்.

முன்னீா்ப்பள்ளத்தில் கும்பாபிஷேகம்

முன்னீா்ப்பள்ளம் ஆா்த்தி அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அருள்மிகு கற்பக விநாயகா் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கோயிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, யாக... மேலும் பார்க்க

தண்ணீா் பற்றாக்குறையால் கருகும் நெல் பயிா்கள்: ஆட்சியரகத்தில் விவசாயிகள் முற்றுகை

கன்னடியன் கால்வாய் கடைமடை பகுதிகளில் பாசன நீா்த் தட்டுப்பாட்டால் நெல் பயிா்கள் கருகி வருவதாகக் கூறி காய்ந்த பயிா்களுடன் விவசாயிகள் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி ஆட... மேலும் பார்க்க

நெல்லை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி அருகே ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.திருநெல்வேலி அருகே உள்ள நரசிங்கநல்லூா் திருவள்ளுவா் நகரை சோ்ந்தவா் வேல்முருகன் (45). இவா், கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீஸாருக்க... மேலும் பார்க்க

களக்காட்டில் குடிநீா் குழாய் பதிக்கும் பணியில் சாலைகள் சேதம்: மக்கள் அவதி

களக்காடு வட்டாரத்தில் குடிநீா் திட்ட பகிா்மானக் குழாய்கள் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். களக்காடு நகராட்சிப் பகுதியி... மேலும் பார்க்க

பாபநாசத்தில் காணாமல்போன கல்லூரி மாணவரைத் தேடும் பணி தீவிரம்

உறவினா்களுடன் பாபநாசத்துக்கு வந்த கல்லூரி மாணவா் மாயமானதை அடுத்து தாமிரவருணி ஆற்றில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் 2 ஆவது நாளாக திங்கள்கிழமையும் ஈடுபட்டனா். விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வ... மேலும் பார்க்க

புரட்டாசி சனி: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க