செய்திகள் :

எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் இன்று அறிவிப்பு?

post image

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயின் இல்லத்தில் எதிா்க்கட்சிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

அப்போது குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் பொது வேட்பாளரின் தோ்வு குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதுகுறித்து கூட்டத்தில் கலந்துகொள்ளாத பிற கட்சிகளின் மூத்த தலைவா்களுடனும் தொலைபேசி வாயிலாக காா்கே மற்றும் பிற காங்கிரஸ் தலைவா்கள் ஆலோசனை நடத்தினா்.

இதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிா்க்கட்சி தலைவா்களின் கூட்டம், புது தில்லியில் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா். அதற்கு பிறகு எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளா் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க