செய்திகள் :

எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்

post image

என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங் கடைசி ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த காட்டிய அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை. 16 பந்துகளில் 44* ரன்கள் குவித்து ஷஷாங் களத்தில் இருந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அரைசதம் விளாசிய ஷ்ரேயாஸ் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

இதுபற்றி அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் கூறுகையில், “நேர்மையாக கூறுவதென்றால், நான் ஸ்கோர் கார்டைப் பார்க்கவே இல்லை. முதல் பந்தில் பவுண்டரி அடித்தப்பின் தான், ஸ்கோர் போர்டை பார்த்தேன். நான் அவரிடம் எதுவும் கூறவில்லை. அவருக்கு சிங்கிள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரே வந்து என்னிடம், என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

டி20 போட்டிகளில் சதம் அடிப்பதென்பது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனால், அவர் அப்படி சொல்வதற்கு பெரிய மன தைரியம் வேண்டும்.

பௌலரை அடித்து விளையாடு என்றார். அனைத்து பந்தையும் அடித்து ஆடு. பவுண்டரி அல்லது சிக்ஸர் விளாசு என்றும் கூறினார். அது எனக்கு இன்னும் நம்பிக்கையை அளித்தது. இந்த மாதிரியான சூழலில் தன்னலமற்றவராக இருப்பது கடினம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: கொல்கத்தா அணியில் சுனில் நரைன்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க

நம்பமுடியாத ஆட்டம்; நிதீஷ் ராணாவுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு!

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதீஷ் ராணா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடியதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கி... மேலும் பார்க்க

ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐபில் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வி... மேலும் பார்க்க

1.78 கோடி பின் தொடர்பவர்கள்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!

இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடம் பிடித்துள்ளது.சென்னை, பெங்களூரு உள்பட 10 அணிகள் விளையாடும் 18... மேலும் பார்க்க