செய்திகள் :

"எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி தான்" - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

post image

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.

கடந்த மாதம், "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

ராமதாஸ், அன்புமணி

தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்திருக்கும் ராமதாஸ், "எனது தைலாபுர வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது என் மகன் அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். ஒட்டுக் கேட்புக் கருவியை காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் காவல்துறை, சைபர் குற்றப்பிரிவு அனைத்திலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் சிறப்புகுழு அமைத்து நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாள்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, கட்சிதலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் 'பாமக' விதிகளுக்கு எதிரானது." என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டிப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செய்திகள்!

'தி கேரளா ஸ்டோரிஸ்' படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். ``கேரளாவின் நற்பெயரை கெடுக்கும், வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் தெளிவான நோக்கத்... மேலும் பார்க்க

மோடி - ஓபிஎஸ் சந்திப்பு விவகாரம்: "இனியாவது உண்மைய பேசுங்க" - நயினார் நகேந்திரனைத் தாக்கும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது அவரது பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

Rahul Gandhi: "நான் ராஜா அல்ல; ராஜா என்ற கோட்பாட்டுக்கு எதிரானவன்" - ராகுல் காந்தி ஓபன் டாக்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.அதன்பின்னர், காங்கிரஸ் எம்.பி-யாகச் செயல்பட்டு வந்த ராகுல் காந்தி தற்போது மக்களவை எதிர்க்கட... மேலும் பார்க்க

"இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்" - ராகுல் காந்தியின் பேச்சுக்கு அருண் ஜெட்லி மகன் பதில்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.விவசாயிகள் சட்டம் அறிம... மேலும் பார்க்க

SIR: "என் பெயரில்லை; நான் எப்படிப் போட்டியிடுவது" -தேஜஸ்வி கேள்விக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், ஒரே மாதத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) தே... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை; சிறப்பு நீதிமன்றம் அதிரடி

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா நேற்று நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க