செய்திகள் :

என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

post image

கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் தொழில்பழகுநர் சட்டம்-1961 இன் விதிகளுக்குட்பட்டு எம்எல்டிி, கன்வேயர் பெல்ட் வல்கனைசர் போன்ற தொழில்பழகுநர் பயிற்சிகளுக்கு பிளஸ் 2 முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது பற்றிய விபரம் வருமாறு:

அறிவிப்பு எண். : L&DC/02A/2025

பணி: Medical Lab Technician (Pathology)

காலியிடங்கள் : 15

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Lab Technician (Radiology)

காலியிடங்கள் : 10

தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Conveyor Belt Vulcaniser (Male Only)

காலியிடங்கள்: 20

தகுதி : +2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கண்ட பணிகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் போது உதவித் தொகையாக முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,766, இரண்டாம் ஆண்டு மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தில் 14.8.2025 தேதிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, அதனை கையொப்பமிட்டு, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.8.2025-க்குள் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி -607803.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Engagement of Apprentices Fresher MLT Pathology and Radiology, Optional Trade

வங்கியில் வேலை வேண்டுமா..?: பரோடா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பரோடா வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி,எஸ்டி,ஓபிசி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..?: ரூ.1,12,400 சம்பளத்தில் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் வேலை!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவியாளர் பணிகளுக்குன தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்... மேலும் பார்க்க

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பண... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் துறையில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழக சுற்றுச்சுழல் மற்றும் கால நிலை மாற்ற துறையில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோஸியேட், மூத்த கணக்கு அலுவலர் மற்றும் தனி உதவியாளர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.... மேலும் பார்க்க

ஐசிஎம்ஆர்-இல் வேலை வேண்டுமா..? பட்டப்படிப்பு, தட்டச்சு முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்)கீழ் இயங்கும் தேசிய பாக்டீரியா தொற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணி!

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகாவுக்கு உள்பட்ட கிராம அலுவலகங்களில் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்த விபரம் வருமாறு:பணி: கிராம உதவ... மேலும் பார்க்க