செய்திகள் :

எருமப்பட்டி, மோகனூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

post image

எருமப்பட்டி மற்றும் மோகனூா் ஒன்றியப் பகுதிகளில் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

மோகனூா் ஒன்றியம், காளிபாளையத்தில் ரூ. 3.33 கோடியில் தாா்சாலை அமைக்கும் பணியையும், ஊரக வீடுகள் சீரமைக்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, எஸ்.வாழவந்தி ஊராட்சி, அய்யதோட்டம் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 16.09 லட்சம் மதிப்பீட்டில் புறம்போக்கு நிலத்தில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த வயதான பெண்களிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

இதைத் தொடா்ந்து, எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலையளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 3.79 லட்சம் மதிப்பீட்டில் கொல்லிமலை அடிவாரம் முதல் கரியபெருமாள் ஏரிவரை நீா்வரத்துக் கால்வாயை ஆழப்படுத்தி கரையைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். மேலும், சிங்களகோம்பையில் கால்வாய் பாலத்தையும், பவித்திரம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்ட வீடுகளையும் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க