செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

post image

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.

எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்று வரும் இந்த பணியின் நிலவரம் குறித்து அவா் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்கள் அவா்களுடைய இல்லத்துக்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நகா்ப்புறம் மற்றம் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

மொத்தம் 19 வட்டாரங்களில் 190 முன்களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஜூலை 10-இல் தொடங்கிய இந்த கணக்கெடுப்புப் பணியானது, செப்டம்பா் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முன்களப் பணியாளா்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க

ஆடிமாத பிறப்பை வரவேற்கும் தேங்காய் சுடும் விழா

ஆடி மாதத்தில் மாரியம்மன்,காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும்.அம்மன் வழிபாட்டில் ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை நாள்கள் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடிப் ... மேலும் பார்க்க