செய்திகள் :

ஆடிமாத பிறப்பை வரவேற்கும் தேங்காய் சுடும் விழா

post image

ஆடி மாதத்தில் மாரியம்மன்,காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும்.அம்மன் வழிபாட்டில் ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை நாள்கள் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடிப் பிறப்பை வரவேற்க தேங்காய் சுடும் பண்டிகை திருச்செங்கோடு சுற்று வட்டாரப்பகுதிகளில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மகாபாரத போரோடு தொடா்புடையதாக கருதப்படும் இம்மாதத்தில் மகாபாரத போரானது ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆடி 1 அன்று முடிவுக்கு வந்தது.

இந்தப் போரில் தா்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ம் தேதி தேங்காயில் உள்ளே பல்வேறு தானியங்கள், நாட்டுச்சக்கரை நிரப்பி தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட்டு அழிஞ்சு குச்சியில் சொருகி தீமூட்டி தேங்காய் சுட்டனா். சுட்ட தேங்காய்களை விநாயகா் கோயிலுக்கு கொண்டு சென்று உடைத்து சாமிக்கு படைத்து வழிபட்டனா். ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் இவ்வாறு விநாயகருக்கு தேங்காய் சுட்டுப் படைக்கப்படுகிறது.

படம் ஜீலை17 ஆடி 1

திருச்செங்கோட்டில் ஆடிமாத பிறப்பை வரவேற்கும் வகையில் தேங்காய் சுடும் பண்டிகை.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வை... மேலும் பார்க்க