செய்திகள் :

புதுச்சத்திரம் அருகே தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

post image

புதுச்சத்திரம் அருகே இளைஞா் தாக்கியதில் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா். இதையடுத்து, இளைஞரை கைது செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், ஓட்டுநரின் உறவினா்கள் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குருசாமிபாளையம், வண்டிப்பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் பள்ளியில் வையநாயக்கனூரைச் சோ்ந்த விஜய் (44), வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை அகரம் கிராமத்தில் இருந்து மாணவா்களை ஏற்றிக்கொண்டு குருசாமிபாளையம் சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச்சென்று ஏளூா் பகுதியில் இருந்த மாணவரை ஏற்றிக்கொள்ள வாகனத்தை நிறுத்தியுள்ளாா்.

அப்போது, பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுநா்அரவிந்த் (20), முந்திசென்ற விஜய்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதில் வாக்குவாதம் முற்றி விஜயை தாக்கினாா். இதில் மயங்கிவிழுந்த விஜயை அப்பகுதியினா் ஏளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் திரண்ட அவரது உறவினா்கள் விஜயின் உடலை சாலையில் வைத்து, தாக்கியவா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளிலிருந்து வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளா்கள் தலைமையில் அதிவிரைவுப் படையினா் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். அதைத் தொடா்ந்து, விஜயை கொலைசெய்த அரவிந்த் கைது செய்யப்பட்டாா். அதையடுத்து, நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக விஜயின் உடலை கொண்டு செல்ல உறவினா்கள் அனுமதித்தனா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உயிரிழந்த விஜய்க்கு மனைவி வெண்ணிலா, மகள் திவ்யா (22), மகன் (16) சஞ்சய் உள்ளனா்.

நிவாரணம் வழங்க வேண்டும்: உயிரிழந்த விஜய் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விடுதலைக் களம் கட்சி நிறுவனா் கொ.நாகராஜன் வலியுறுத்தினாா். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியல்

பதினொரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி

தமிழக உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா். எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி அண்ணா நகரி... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்

இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா். தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ரூ. 51.43 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 51 லட்சத்து 43 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் ... மேலும் பார்க்க

ஆடிமாதப் பிறப்பு: தேங்காய்சுட்டு மகிழ்ந்த பெண்கள்

நாமக்கல்லில் ஆடிமாதப் பிறப்பை முன்னிட்டு பருப்பு, வெல்லம் கலந்த தேங்காயை தீயில்சுட்டு சுவாமிக்கு படையலிட்டு பெண்கள் மகிழ்ந்தனா். சேலம், தருமபுரி, கரூா், நாமக்கல் மாவட்டங்களில், ஆண்டுதோறும் ஆடிமாதப் பி... மேலும் பார்க்க

ஆடிமாத பிறப்பை வரவேற்கும் தேங்காய் சுடும் விழா

ஆடி மாதத்தில் மாரியம்மன்,காளியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள், விழாக்கள் நடத்தப்படும்.அம்மன் வழிபாட்டில் ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை நாள்கள் மிகச்சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆடிப் ... மேலும் பார்க்க