செய்திகள் :

எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!

post image

கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

எர்ணாகுளம் - பெங்களூர் மற்றும் பெங்களூர் - எர்ணாகுளம் இடையே நாள்தோறும் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது.

பெங்களூரில் புறப்படும் இந்த ரயில் ஓசூர், சேலம், ஈரோடு, கோவை என 300 கிலோ மீட்டருக்கு மேல் தமிழகம் வழியாக பயணித்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் செல்கிறது.

கர்நாடக எல்லைக்குள் வெறும் 20 கி.மீ., கேரள எல்லைக்குள் 200 கி.மீ. மட்டுமே பயணிக்கிறது.

ஆனால், இந்த ரயிலின் பெட்டிகளில் கன்னடம், ஹிந்து மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக தொலைவு பயணிக்கும் ரயிலில், தமிழ் மொழி பலகை இல்லாததால் தமிழை புறக்கணிப்பு செய்வதாக குற்றம்சாட்டி கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூர் - எர்ணாகுளம் ரயில் இன்று பிற்பகல கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

அவர்களை தடுத்த காவல்துறையினர் 20 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும், திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணிப்பதாக முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

பாமக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்!

பாமக சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில், அது பெரிதாக வெ... மேலும் பார்க்க

700 கிலோ வெண்கலத்தாலான கருணாநிதி சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!

வேலூர் அணைக்கட்டு அருகே கெங்கநல்லூா் சந்தை திடலில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞா் அறிவாலயம்’ அறிவுசாா் நூலக கட்டடத்தையும், 700 கிலோ வெண்கலத்தாலான முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையையும் முதல்வர் ஸ்டாலின் த... மேலும் பார்க்க

கூலித்தொழிலாளிக்கு உடனடி பணி நியமன ஆணையை வழங்கிய முதல்வர்!

முதல்வர் ஸ்டாலின் வேலூர் சுற்றுப் பயணத்தின்போது, வேலை வேண்டி மனு அளித்த கூலித் தொழிலாளி பொற்செல்விக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தில் விடுதிக் காவலராக நியமனம் செய்து, அதற... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!

நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்நெல்லை மேலப்பாளையம் ம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க