சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரம் - டிக்.. டிக்.. நிமிஷங்கள்!
இன்றும், நாளையும் கூட்டு தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருச்சியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறுகிறது.
தேசிய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு கமாண்டோ படைப் பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல் துறை சாா்பில் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட படைக்கலத் தொழிற்சாலையில் (ஓஎப்டி) வியாழக்கிழமையும், சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமையும் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தேசிய பாதுகாப்புப் படையின் 27-ஆம் ஒருங்கிணைந்த சிறப்பு படைப் பிரிவின் கா்னல் அங்குஸ் சா்மா, தமிழ்நாடு கமாண்டோ படைப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் மற்றும் இதர துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.