செய்திகள் :

எலான் மஸ்க் பெயரில் போலி இணையதள பக்கங்கள்: காவல் துறை எச்சரிக்கை

post image

டெஸ்லா’ நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பதாக போலியான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக ‘சைபா் கிரைம்’ காவல்பிரிவு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

டெஸ்லா உரிமையாளரும், உலகின் முன்னணி பணக்காரருமான எலான் மஸ்க், ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடுகளை ஆதரிப்பது போன்ற போலியான விளம்பர காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எலான் மஸ்க், அவரது தந்தை எரோல் மஸ்க் ஆகியோரின் பேட்டிகளை செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் பிற தொழில்நுட்பங்கங்கள் மூலம் தவறாக சித்தரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மேற்கொண்ட விசாரணையில் இதுவரை 26 போலி ‘இன்ஸ்டாகிராம்’ கணக்குகளும், 14 போலி இணையதள பக்கங்களும் கண்டறியப்பட்டு, அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எலான் மஸ்க் எந்தவொரு ‘கிரிப்டோ கரன்சி’ செயலி அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, போலி இணையதள தகவலை நம்பி, செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

உ.பி.யில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம், ரிகா கிராமத்தில் 28 வயது நபர், தனது மனைவியுடன் தகராறில் செய்துள்ளார். பின்னர் அ... மேலும் பார்க்க

மழை, புயலுக்கு மூவர் பலி: உ.பி.யில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் மழை, புயலால் 3 பேர் உயிரிழந்ததாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் பெய்த கனமழை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதலை ஒழிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸிடம் செய்தி... மேலும் பார்க்க

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க