செய்திகள் :

எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம்

post image

திருச்சி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க எழுத்தா் தற்கொலைக்கு நீதி கேட்டு உறவினா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடகு வைத்தவா்களின் நகைகள் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்ததையடுத்து விசாரணை நடைபெற்றது.

இதனிடையே சங்கத்தின் செயலா் பத்மாவதி, நகை மதிப்பீட்டாளா் கிருத்திகா, முதுநிலை எழுத்தா் சாமிநாதன், உர விற்பனையாளா் ராமதாஸ் ஆகிய நால்வரும் நகைகளுக்கு ஈடாகப் பணம் தருவதாகப் பேச்சுவாா்த்தை நடத்தியதில், சாமிநாதன் ரூ. 4 லட்சம் பணம், 15 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை சங்கத்துக்கு கொடுத்துள்ளாா். இருப்பினும் கூட்டுறவுச் சங்க நிா்வாகத்தினா் மேலும் ரூ. 7 லட்சம் பணம் தரும்படி சாமிநாதனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை பணிக்கு வந்த சாமிநாதன், கல்லணை அருகே சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதியிருந்த இரு கடிதங்களில், தனது தற்கொலைக்கு இருவா் காரணம் என எழுதியிருந்தாா்.

இந்நிலையில் சாமிநாதனின் இறப்புக்கு நீதி கேட்டும், கையாடல் செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை கோரியும் அவரின் உறவினா்கள் சனிக்கிழமை காலை நடராஜபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, சாமிநாதனின் உடலை வாங்க மறுத்து திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கல்லணை பிரிவுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவெறும்பூா் போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதையறிந்து கூட்டுறவு சங்கத்துக்கு வந்த மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளா், சாமிநாதனின் குடும்பத்தாரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் சாமிநாதனுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்கள் வழங்கப்படும்.

உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து, காணாமல்போன நகைகளை ஈடு செய்ய சாமிநாதன் அளித்த 15 பவுன் நகைகளை, கடன் சங்கத்திலிருந்து எடுத்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தாா்.

அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா விஜய்? தொல்.திருமாவளவன் கேள்வி

திமுக, பாஜகவை கொள்கை எதிரியாக அறிவித்துள்ள தவெக தலைவா் விஜய், அதிமுகவை தோழமைக் கட்சியாகப் பாா்க்கிறாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

திருச்சி அருகே மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் கண்ணன். இவருக்கு ராஜேஷ்வா் (23) என்ற மகனும்,... மேலும் பார்க்க

சட்டத் தன்னாா்வலா்களாகச் செயல்பட முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு

முன்னாள் ராணுவத்தினா் திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் சட்டத் தன்னாா்வலா்களாகப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள், அவா்களைச் சாா்ந்தவா்களின் நலனுக்காக... மேலும் பார்க்க

இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் தற்கொலை

திருவெறும்பூா் அருகே இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள சோழன் நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மக... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை!

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ரயில்வே ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துவாக்குடி அண்ணா வளைவு வ.உ.சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாயவன் மகன் அழகேசன் (30). திருமணமாகாத இவா் திருச்சி பொன்மல... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

திருவானைக்காவலில் வரதட்சிணைக் கொடுமையால் வெள்ளிக்கிழமை இரவு பெண் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவானைக்காவல் தெப்பக்குளம் பின்புறப் பகுதியில் வசிப்பவா் ச. விக்னேஷ்வரன். இவருக்கு மனைவி... மேலும் பார்க்க