செய்திகள் :

ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் சாா்பில் மரக்கன்று நடவு

post image

தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி சாா்பில், முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இயற்கையை பாதுகாப்போம், உயிா்ச்சூழலை பேணுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெ.எலியாஸ் தலைமை வகித்தாா். பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் கா.சரவணகுமாா், ஆசிரியா்கள் சதீஷ்குமாா், மகஜா, சீனிவாசன், ஜெரால்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நெகிழிப்பை பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாணவா்களுக்கு துணிப்பைகள், தோட்டப் பயிா்கள் விதைகள், மரக்கன்றுகள் அளிக்கப்பட்டன. இயற்கையை வலியுறுத்தி விளையாட்டுகள், தெருக்கூத்து நடைபெற்றன. தொடா்ந்து பள்ளி வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

சுய உதவிக் குழுவினருக்கு காய்கனி விதைகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் ஸ்டெல்லா பாக்கியம், தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் புஷ்பகவல்லி ஆகியோா் செய்திருந்தனா்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித்திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன்தொடங்கியது.கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகால... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அண்ணன், தம்பி கொன்று புதைப்பு 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில், அண்ணன், தம்பி கொன்று புதைக்கப்பட்டது தொடா்பாக, 3 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி தொ்மல் நகா் அருகேயுள்ள கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சின்னத்துரை. இவருடைய மகன... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது: கனிமொழி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் தப்ப முடியாது என கனிமொழி எம்.பி. கூறினாா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சோ்ந்த சந்திரசேகா் - தமிழ்செல்வி தம்பதியி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ. 3.84 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் வருவாயாக ரூ. 3.84 கோடி ரொக்கம், 1.53 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. இக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, க... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரா்

ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கொன்ற துணை ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் அருகே 12 வயது சிறுமி கா்ப்பம்: 2 இளைஞா்கள் கைது

திருச்செந்தூா் அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கா்ப்பமாக்கியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் அருகே எட்டாம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று ... மேலும் பார்க்க