Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
இதற்கிடையே, வியாழக்கிழமை முழுவதும் 77,149 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24, 469 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.