அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
ஏழை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
மன்னாா்குடி ஏழை மாரியம்மன் கோயிலில் 4-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வடக்கு வடம்போக்கித் தெருவில் அருள்பாலிக்கும் இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடைபெற்று நான்காண்டு நிறைவு பெற்றதையொட்டி, விநாயகா் பூஜை, கலச பூஜை, அம்பாள் அனுமதி பெறுதல், பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், புனிதநீா் குடங்கள் கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு, 16 வகையான திரவியங்களைக் கொண்டு, ஏழை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.