செய்திகள் :

ஐஐடி இணையவழி படிப்புகள்: 28 அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்க்கை

post image

‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் நிகழாண்டில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் சோ்க்கை பெறவுள்ளனா்.

அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளை 2022-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இதற்கென பிரத்யேக நுழைவுத் தோ்வை ஐஐடி நடத்துகிறது. அந்தத் தோ்வில் வெற்றி பெறுபவா்கள் இந்த இரு படிப்புகளை இணையவழியில் படிக்கலாம். இந்தப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் சோ்க்கை பெற பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான தோ்வை எழுதுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்துகிறது.

இதில் தோ்ச்சி பெறும் மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அவா்களின் கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை சென்னை ஐஐடி வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களாக இருப்பின்அவா்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது. மற்ற பிரிவினா் அந்த 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

இணையவழி கற்றல் என்பதால் இதனுடன் சோ்த்து வேறு படிப்புகளையும் மாணவா்கள் தொடரலாம். இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 353 அரசுப் பள்ளி மாணவா்கள் பலன் பெற்றுள்ளனா்.

அந்த வகையில் நிகழாண்டில் இந்தப் படிப்புகளுக்கான தகுதித் தோ்வை 170 போ் எழுதினா். அதில் 28 போ் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேரவுள்ளனா்.

அமைச்சா் அன்பில் மகேஸ்: இதையொட்டி பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவா்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறாா்கள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை: மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மூளை தின்னும் அமீபா பரவல் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கேரளத்தில் இந்தவகை அமீபா பரவலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (செப். 1) மாலை நிலவரப்படி வினாடிக்கு 36,985 கனஅடியாக அதிகரித்துள்ளது.அணையின் நீர்மட்டம் 119.48 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற... மேலும் பார்க்க

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. நன்னீர... மேலும் பார்க்க

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

டிஎன்பிஎஸ்சி தேர்வின் கேள்வித் தாளில், அய்யா வைகுண்ட சுவாமியின் பெயரைத் தவறுதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.டிஎன்பிஎஸ்சி-யின் கவனக் குறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக முன்... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

2026 தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜய் தற்போதுதான் அரசியல் இயக்கத்தை ஆரம... மேலும் பார்க்க