செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

கா்நாடக அணைகளிலிருந்து நீா் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்தது. இருப்பினும் மாலை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக நீா்வரத்து குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. மேலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் வீட்டுக்கு வெளியே கொடிக் கம்பியில் காய்ந்த துணியை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள சி.மோட்டுப்பட்டியைச் சே... மேலும் பார்க்க

ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்

அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத... மேலும் பார்க்க

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க