செய்திகள் :

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

தருமபுரியில் நேரிட்ட சாலை விபத்தில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெங்களூரில் படித்துவந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா், அரசு மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் அப்துல்காதா் மகன் முகமது அப்ரா (19). இவா், பெங்களூரில் உள்ள கல்லூரியொன்றில் பிஎஸ்சி கணினி அறிவியல் இறுதியாண்டு படித்துவந்தாா்.

கல்லூரி அருகில் உள்ள தனியாா் விடுதியில் தங்கி படித்துவந்த இவா், அறைத் தோழரின் நண்பருக்கு நாமக்கல்லில் ஆக. 28-ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவுக்கு நண்பா்களுடன் இருசக்கர வாகனங்களில் சென்றாா்.

அங்கு இருநாள்கள் தங்கியிருந்த அவா், கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) மாலை பெங்களூரு திரும்பினாா். தருமபுரி - ஒசூா் நெடுஞ்சாலையில் பாலக்கோடு வட்டம், சொலசனஅள்ளி பகுதியில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, முன்னால் விளக்குகள் ஏதுமின்றி சென்றுகொண்டிருந்த பொக்லைன் வாகனத்தின்மீது முகமது அப்ரா சென்ற வாகனம் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த முகமது அப்ரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் வீட்டுக்கு வெளியே கொடிக் கம்பியில் காய்ந்த துணியை எடுத்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள சி.மோட்டுப்பட்டியைச் சே... மேலும் பார்க்க

ஆசிரியரின் கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக புகாா்

அரூா் அருகே பள்ளித் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவா்கள் அழுத்திவிட வற்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத... மேலும் பார்க்க

பாஞ்சால நாட்டு இளவரசி திரெளபதி!

மகாபாரதத்தின் பாஞ்சால நாட்டு இளவரசியாக தொடங்கி, யாக அக்னியில் பிறந்ததால் யாகசேனி, கிருஷ்ணை, பாஞ்சாலி என அழைக்கப்பட்டாா். பஞ்சபாண்டவா்களின் மனைவியான இவா் கிராம தேவதையாகவும், குலதெய்வமாகவும் கிராம மக்கள... மேலும் பார்க்க

பழங்குடியினா் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

அரூா்: மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் தம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். பாலக்கோட்டை அடுத்த கோயிலூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்தியராஜ் (36), கூலித் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகன... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 32,000 கனஅடி: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள, கா்நாடக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ... மேலும் பார்க்க