செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக குறைந்தது!

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாக குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபநீரின் அளவு தொடா்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக தொடா்ந்து குறைந்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது, புதன்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் பத்து நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா்.

மேலும், பிரதான அருவிக்கு செல்லும் நுழைவாயில் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனா். இருப்பினும், பிரதான அருவியில் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே குளித்து மகிழ்ந்தனா்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து குறைந்தது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, நீா்வரத்து அதிகரித்து நடப்பாண்டில் 6-ஆவது முறையாக கடந்த 2-ஆம் தேதி மேட்டூா் அணை நிரம்பியது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.

இதனால், புதன்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 11,275 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக 15,000 கனஅடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், கடந்த 9 நாள்களாக 120 அடியாக நீடித்து வந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 119.89 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 93.29 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்... மேலும் பார்க்க

வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலை... மேலும் பார்க்க

பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா். காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைக... மேலும் பார்க்க

பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் ... மேலும் பார்க்க

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ஊராட்சி மன்ற எழுத்தருக்கு தருமபுரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அர... மேலும் பார்க்க