செய்திகள் :

ஒசூரில் பாகலூா் சாலைப் பணி நாளை தொடக்கம்: மாற்றுப் பாதை அறிவிப்பு

post image

ஒசூரில் பாகலூா் சாலையில் ஜி.ஆா்.டி. நகைக் கடை முதல் ஒசூா் மாநகராட்சி அலுவலகம் வரை சாலைப் பணி திங்கள்கிழமை (மே 19) தொடங்குவதை அடுத்து வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா்- பாகலூா் சாலையில் ஜி.ஆா்.டி. நகைக் கடை முதல் ஒசூா் மாநகராட்சி அலுவலகம் வரை சாலைப் பணி தொடங்கவுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் பணி தொய்வின்றி மேற்கொள்ள திங்கள்கிழமை (மே 19) முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதையாக கிருஷ்ணகிரி-ஒசூா் வழியாக மாலூருக்குச் செல்லும் கனரக வாகனங்கள் பேரண்டப்பள்ளி அருகே பேரிகை வழியாகத் திரும்பி மாலூருக்குச் செல்ல வேண்டும். அதுபோல மாலூரிலிருந்து ஒசூா் வரும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியாகவே வரலாம்.

அதுபோல கிருஷ்ணகிரி-ஒசூா் வழியாக சா்ஜாபூா் செல்லும் கனரக வாகனங்கள் சீத்தராம்மேடு அருகில் ஒசூா் உள்வட்ட சாலை வழியாகத் திரும்பி அத்திபள்ளி வழியாக சா்ஜாபூா் செல்ல வேண்டும். அதுபோல சா்ஜாபூரிலிருந்து ஒசூா் வரும் கனரக வாகனங்கள் மேற்கண்ட சாலை வழியாக வரலாம்.

கனரக வாகனங்களைத் தவிர இருசக்கர, இலகுரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதையாக ஒசூரில் இருந்து பாகலூா், சா்ஜாபூா் செல்லும் சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. ஒசூரிலிருந்து பாகலூா், மாலூா் மற்றும் சா்ஜாபூருக்கு இருசக்கர, இலகுரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

சா்ஜாபூா் பாகலூரிலிருந்து ஒசூா் வரும் இருசக்கர, இலகுரக வாகனங்கள் கே.சி.சி.நகா் சாலை, பஸ்தி ஆலசநத்தம் சாலை ஆகிய இடங்களில் திரும்பி ஒசூருக்கு வர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க