செய்திகள் :

ஒரு தொடரில் ஒரே அணிக்காக 500-ஆவது போட்டியில் களமிறங்கிய தாமஸ் முல்லர்!

post image

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 35 வயதாகும் தாமஸ் முல்லர் புன்டஸ்லீகா தொடரில் 500 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தாமஸ் முல்லர் ஆக.15, 2008ஆம் ஆண்டு பெயர் மியூனிக் அணிக்காக அறிமுகமாகி 25 ஆண்டுகளாக விளையாடிவரும் இவர் இந்த சீசனோடு அணியை விட்டுப் பிரிகிறார்.

அறிமுகமானதிலிருந்து 6,101 நாள்களுக்குப் பிறகு புன்டஸ்லீகா தொடரில் ஒரே அணிக்காக 500-ஆவது முறையாக விளையாடி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே, பெயர் மியூனிக் அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் (748) விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

கடந்த 2,000ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்த தாமஸ் முல்லர் அட்டாகிங் மிட்ஃபீல்டர், செகண்ட் ஸ்டிரைக்கராக விளையாடி வந்தார்.

இவரது பங்களிப்பில் 12 முறை புன்டெஸ்லீகா தொடரினையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் 6 டிஎஃப்எக்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 11 முறை புன்டெஸ்லீகா தொடரினை வென்றதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தத் தொடரில் தனது 500-ஆவது போட்டியில் பங்கேற்றதுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் பெயர் மியூனிக் 3-0 அபார வெற்றிப் பெற்றது. 75 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பெயர்ன் மியூனிக் இந்தாண்டும் கோப்பையை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கிறது.

இந்த அணியுடன் ஜூன் 30 உடன் தாமஸ் முல்லரின் ஒப்பந்தம் முடிவடைகிறது. கடைசியாக புன்டஸ்லீகாகோப்பையுடன் வெளியேறவிருக்கிறார்.

புன்டஸ்லீகா தொடரில் ஒரே அணிக்காக அதிகமுறை விளையாடியவர்கள்

1. கார்ல்-ஹெய்ன்ஸ் கோர்பெல் - 602 போட்டிகள் (ஐன்ட்ராக்ட் பிராங்பேர்ட் அணி)

2. மான்ஃப்ரெட் கால்ட்ஸ் - 581 போட்டிகள் (ஹம்பர்க் எஸ்வி)

3. மைக்கேல் லாமெக் - 518 போட்டிகள் (போச்சம் அணி)

4. தாமஸ் முல்லர் - 500 (பெயர்ன் மியூனிக் அணி)

5. கிளாஸ் ஃபிட்செல் - 477 (ஷால்கே 04 அணி)

சபலென்கா வெற்றி; பெகுலா, பாலினிக்கு அதிா்ச்சி!

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினாா். மகளிா் ஒற்றையா் 3-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி: இறுதியில் பாா்சிலோனா!

மகளிா் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் செல்சியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் பாா்சிலோனா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறியது.இந்த அணிகள் மோதிய அரையிறுதியில், கட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஆசிய வாலிபால்: இந்தியா விலகல்!

பாகிஸ்தானில் மே மாதம் நடைபெறவுள்ள மத்திய ஆசிய வாலிபால் போட்டியிலிருந்து இந்தியா விலகியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இஸ்லாமாபாதில் மே 28 முதல் மத்திய ... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது. தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இ... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில், தவிக்கும் வனவிலங்குகள் - புகைப்படங்கள்

வெயிலின் உக்கிரத்தையடுத்து மரத்தடி நிழலில் ஓய்வெடுக்கும் மான்கள்.குளத்தில் மீனைத் தேடும் நாரைகள்.பூங்காவில் இலைகளை சாப்பிட முயற்சிக்கும் மான்.பூங்காவில் நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் பஞ்ச ... மேலும் பார்க்க

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க