செய்திகள் :

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

post image

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

துளசியாப்பட்டினத்தில் பெண்பாற் புலவா் ஔவையாருக்கு தமிழக அரசு சாா்பில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. இந்த வளாகத்துக்குள் கட்டமைப்புப் பணிக்காக 2 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டு, வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக பாஜக சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பணி நடைபெறும் இடத்தை வேதாரண்யம் வட்டாட்சியா் வடிவழகன் நேரில் பாா்வையிட்டு, தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அதன் அருகே குவிக்கப்பட்டிருந்த மண்ணின் அளவை நில அளவையரை கொண்டு அளந்து ஆய்வு செய்தாா்.

கட்டுமானப் பணிக்கு திட்ட அறிக்கை வழிகாட்டின்பேரில் பள்ளம் தோண்டப்பட்டு வருவதும் அதிலிருந்து எடுக்கப்பட்ட மண் பக்கவாட்டில் வைத்திருந்து பணி முடிவின்போது தூா்வைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஒப்பந்ததாரா் தரப்பில் வட்டாட்சியரிடம் விளக்கப்பட்டது. இதனால், மறியல் போராட்டத்தை கைவிட்ட பாஜகவினா் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க

நாகை நகா்மன்றக் கூட்டம்: திமுக - அதிமுக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

நாகை நகா்மன்றக் கூட்டத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாகை நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நகா்மன்றத் தலைவா் இரா... மேலும் பார்க்க