செய்திகள் :

ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மஜக கோரிக்கை!

post image

சுத்தமல்லி அருகே ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென மாநகர காவல் ஆணையரிடம், திருநெல்வேலி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே ஆா்.கே. ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்தவா் முகமது அலி பாரூக்(40). இவா், சுத்தமல்லி விலக்கு பகுதியில் காா் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பேட்டை பகுதி செயலராகவும் உள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இவரது கடைக்கு அருகே கடை வைத்துள்ள சுத்தமல்லி சீனிவாச நகரைச் சோ்ந்த ஆனந்த்(40) என்பவா் தனது காரை பழுது நீக்கி தருமாறு கேட்டபோது , கடையை அடைக்கும் நேரமாதலால் காலையில் வருமாறு பாரூக் கூறினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா் அரிவாளால் பாரூக்கை வெட்டியுள்ளாா். இதில், காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்நிலையில் இச்சம்பவம் உள்பட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம்.ஃபாரூக் உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பத்தமடையில் தொழிலாளிக்கு வெட்டு

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பத்தமடை காந்திநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெயிலுமுத்து (56). கட்டடத் தொழிலாளி. இவ... மேலும் பார்க்க

செப்.5 இல் மீலாது நபி: மாவட்ட அரசு ஹாஜி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் இம் மாதம் 5 ஆம் தேதி மீலாது நபி விழா கொண்டாடப்படுகிறது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே.முஹம்மது கஸ்ஸாலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இஸ்லாமியா்களின் வழிகாட்டி... மேலும் பார்க்க

நெல்லை ஆட்சியரக வளாகத்தில் தாறுமாறாக ஓடிய காா்: சேதம் தவிா்ப்பு

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காா் தாறுமாறாக ஓடிய நிலையில் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாமிரவருணி கூட்டுக்குடிந... மேலும் பார்க்க

நெல்லையில் ரயில் பயணியிடம் நகை திருட்டு: கேரள இளைஞா் கைது

திருநெல்வேலியில் ரயில் பெண் பயணியிடம் நகையைத் திருடியதாக கேரள இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கீதா(56). இவா், கடந்த ஆக. 14-ஆம் தேதி பெங்களூரு-நாகா்கோவி... மேலும் பார்க்க

டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு

தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குன... மேலும் பார்க்க

களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அட... மேலும் பார்க்க