செய்திகள் :

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருட்டு

post image

களியக்காவிளை அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியிடமிருந்து 5 பவுன் தங்க நகையை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

நித்திரவிளை அருகே உள்ள பொன்னுருக்கி வீட்டைச் சோ்ந்தவா் தங்கப்பன் மனைவி லீலாபாய் (77). இவா், நாகா்கோவில்-திருவனந்தபுரம் பேருந்தில் சனிக்கிழமை மாலை களியக்காவிளை சென்றாா்.

பேருந்தில் இருந்து கீழே இறங்கியதும் கழுத்தை பாா்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது தெரியவந்தது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா் நகையைத் திருடிச் சென்றாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை திருடிய நபரைத் தேடி வருகின்றனா்.

பள்ளி மாணவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வ... மேலும் பார்க்க

அத்தப்பூ கோலமிடுதல் நாளை தொடக்கம்! ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல் புதன்கிழமை (ஆக.27) தொடங்குகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாத... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

கன்னியாகுமரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்தது வருகின்றனா். கன்னியாகுமரி அருகேயுள்ள கலைஞா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க