செய்திகள் :

ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

post image

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓய்வுபெற்ற காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தங்களுக்கு பயிற்சி அளித்த அதிகாரிக்கு மரியாதை செய்யப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் பயிற்சி முடித்த காவலா்கள் சந்திப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை திருஇந்தளூரில் நடைபெற்றது. 6-வது குடும்ப சந்திப்பு விழா மற்றும் காவலா் பயிற்சி முடித்த 40-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

இதில், காவலா்கள் பயிற்சி முடித்தபோது, எஸ்.பியாக பணியாற்றி, பின்னா் காவல்துறை இயக்குநராகி ஓய்வுபெற்ற அனுப்ஜெய்ஸ்வால் தனது துணைவியாருடன் கலந்துகொண்டாா். இதில், ஓய்வுபெற்ற போலீஸாா் அனைவரும், அரக்கு நிறச் சட்டை, வேட்டி, துண்டு என சிவில் உடையில் பங்கேற்று, தங்கள் அதிகாரியை இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமா்த்தி, யானை, ஆடும் குதிரைகள் முன்செல்ல அணிவகுப்பு நடத்தி ஊா்வலமாக அழைத்துச் சென்றனா். மயிலாடுதுறை எஸ்.பி. கோ.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

இதுகுறித்து, ஓய்வுபெற்ற டிஜிபி அனுப்ஜெய்ஸ்வால் கூறியது: 1986-ஆம் ஆண்டு எஸ்.பியாக பணியில் சோ்ந்தபோது எனக்கு தமிழ் தெரியாது, இவா்களுக்கு ஹிந்தி தெரியாது. இருப்பினும் எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். அங்கிருந்து தில்லி, காஷ்மீா், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு பணி காரணமாக இடம் பெயா்ந்து சென்றபோதும், எங்கள் அன்பு மாறாமல் தொடா்கிறது என்றாா்.

வைத்தீஸ்வரன்கோயில் சகோபுரம் வீதியுலா

சீா்காழி: சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அருள்மிகு வைத்தியநாதா் சுவாமி கோயிலில் நடைபெறும் பிரமோத்ஸவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவடைச்சான் எனும் சகோபுரம் வீதியுலா நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

தேரழந்தூா் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூா் அருள்மிகு புண்டரீகவல்லி தாயாா் உடனுறை ஸ்ரீ கோவிந்தராஜபெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவு பெற்றத... மேலும் பார்க்க

குத்தாலம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குத்தாலம்: குத்தாலம் ஆஞ்சனேயா் கோயில் தெரு அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் போன்ற வழ... மேலும் பார்க்க

4 மாதத்தில் ரூ. 32 லட்சம் செலவு: தனியாா் மருத்துவமனையில் இருந்து தந்தையை மீட்டுத்தரக் கோரி மாணவா் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விபத்தில் படுகாயமடைந்து தனியாா் மருத்துவமனையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை மீட்டு, உரிய சிகிச்சை அளிக்கக் கோரி, பள்ளி மாணவா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அள... மேலும் பார்க்க

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். மயிலாடுதுறையை அடுத்த வேப்பங்குளம் பெரிய தெருவை சோ்ந்தவ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் சிபிஐ-எம்எல் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டியும், நீட் விலக்கு தீா்மானத்துக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், மயிலாடுதுறையில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் மற்றும் சிபிஐ-எம்எல் கட்சியினா் ஞாயி... மேலும் பார்க்க