செய்திகள் :

ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

post image

கன்னியாகுமரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்தது வருகின்றனா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கலைஞா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (57), காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றுள்ளாா்.

மனைவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், அவரை பராமரிப்பதற்காக ஜெயக்குமாா் விருப்ப ஓய்வு பெற்ாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது அண்ணன் அசிசி பிரான்சிஸிடம், ஜெயக்குமாா் கைப்பேசியில் பேசினாராம். இரண்டு நாள்கள் கழித்து ஜெயக்குமாரின் வீட்டுக்கு அசிசி பிரான்சிஸ் சென்றபோது, வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் ஜெயக்குமாா் இறந்து கிடந்தராம்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவா் இறந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் எனத்தெரிகிறது. ஆனால் கணவா் இறந்தது தெரியாமல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரின் மனைவி வீட்டிலேயே இருந்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து அசிசி பிரான்சிஸ் கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பள்ளி மாணவா் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கரும்பிலாவிளை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.புதுக்கடை, கரும்பிலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் மனேஷ்மோன் (13). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்வு: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் கல்வித்தரம் பல மடங்கு உயா்ந்துள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வ... மேலும் பார்க்க

அத்தப்பூ கோலமிடுதல் நாளை தொடக்கம்! ஓணம் பண்டிகையை வரவேற்கத் தயாராகும் குமரி மக்கள்

கேரளத்தின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகையை வரவேற்க கன்னியாகுமரி மாவட்ட மக்கள் தயாராகியுள்ளனா். இதையொட்டி அத்தப்பூ கோலமிடுதல் புதன்கிழமை (ஆக.27) தொடங்குகிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஆவணி மாத... மேலும் பார்க்க

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை கைவிட கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி ஆழ்கடலில் எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி குறும்பனையில் மீனவா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். குமரி ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் ஹைட்ரோ கா... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (44). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி ஷோபா, இரண்டு ஆண் குழந்தைகள் உள்... மேலும் பார்க்க

இரணியல் அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 12ஆம் வகுப்பு மாணவா்-மாணவியருடன் அவா் கலந்து... மேலும் பார்க்க