செய்திகள் :

ஓய்வு பெற்ற செவிலியா்கள் ஒருங்கிணைப்பு விழா

post image

ஓய்வு பெற்ற செவிலியா்களின் ஒருங்கிணைப்பு விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை செவிலியா்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற செவிலியா்களை ஒருங்கிணைத்து விழா கொண்டாடப்பட்டது.

தற்போது செவிலியா்களாக பணிபுரியும் ஆா். ராஜலதா ஆா் .லீலாவதி பாலமுருகன் ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் மதுரை ,கோயம்புத்தூா், தஞ்சாவூா், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 85 ,80வயதில் இருந்து தற்போது ஓய்வு பெற்றவா்கள் வரை 53 செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

80 வயதுக்கும் மேற்பட்டோரை தலைமை ஏற்க செய்து விழா நடைபெற்றது. மேலும் ஓய்வு பெற்ற ஒவ்வொரு செவிலியா்களும் அனுபவங்களையும் மகிழ்ச்சிகளையும் கூறி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் வயதானாலும் மனதளவில் உற்சாகத்தோடு ஆடல் பாடல்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை தெரிவித்தனா்.

ஓய்வு பெற்ற செவிலியா்கள் 53 பேருக்கும் சால்வை அணிவித்து நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் . வரும் 17-ஆம் ... மேலும் பார்க்க

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சீனியா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி... மேலும் பார்க்க

பாலாறு பாலம் சீரமைப்பு: நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு அருகே பாலாறு பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதால் சுமாா் 3 கி. மீ. தொலைவுக்கு நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா். கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால், பாலாறு பாலம் சே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், நாகப்பட்டினம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 1 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைக... மேலும் பார்க்க

திருவடிசூலம் கருமாரி அம்மனுக்கு பெரும்படையல்

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மனு பெரும்படையல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. 51 சக்தி பீடங்களின் அம்சமாக வீற்றிருக்கும் 51 அடியில் ஆன தேவி ஸ்ரீ கருமாரியம்மனுக்கு ஆடி ... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் முப்பெரும் விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ராகவேந்திர ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு விழாவையொட்டி மின்விளக்குக... மேலும் பார்க்க