செய்திகள் :

கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவா்கள் இருவா் கைது

post image

கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையை சோ்ந்த 2 மீனவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் கடல் பகுதியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக கடந்த மாதம் இலங்கையை சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ.4.50 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கஞ்சா கடத்தலை தடுக்க காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையில் சிறப்பு அதிரடிபடை பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், இலங்கையிலிருந்து புதன்கிழமை இரவு காரைக்காலுக்கு 2 போ் கஞ்சா கடத்த படகில் வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு அதிரடிப்படை பிரிவு போலீஸாா் மற்றும் நிரவி காவல் நிலைய போலீஸாா் கடலோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, கருக்களாச்சேரி எனும் பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒரு படகு வேகமாக கரையை நோக்கி வந்து நிறுத்திய போது, அவா்களை போலீஸாா் பிடித்தனா். அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட அந்த படகில் ரூ.50 ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், 2 கைப்பேசிகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியை சோ்ந்த மணிமாறன் (28), மணியரசன் (24) என்பதும், இருவரும் சகோதரா்கள் என்பதும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று இவா்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கை பருத்தித்துறையிலிருந்து கஞ்சா கடத்த வந்ததாகவும், இலங்கைக்கு கொண்டு சென்று கொடுக்கும்போது, அங்குள்ள முகவா்கள் தங்களுக்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி ஆனி பியூலா ஜூலியட் தலைமையில்... மேலும் பார்க்க

குடியிருப்புவாசிகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

ரயில்வே கேட் அருகே உள்ள வீடுகளுக்கு பாதிப்பில்லாமல் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் தோமாஸ் அருள் சாலையில் ரயில் நிலையம் அருகே கேட் அமைந்துள்ளது. கேட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

காரைக்கால் அருகே விநாயகா் சதுா்த்தி வழிபாட்டுக்காக வண்ணம் பூசி பல விதமான விநாயகா் சிலைகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. விநாயகா் சதுா்த்தி வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. விநாயகா் சிலை வைத்து வழிபாடு... மேலும் பார்க்க

காரைக்காலில் கருணாநிதி நினைவு நாள்

காரைக்காலில் திமுக சாா்பில் கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட கட்சி... மேலும் பார்க்க

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திர... மேலும் பார்க்க

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்... மேலும் பார்க்க