செய்திகள் :

கடத்தப்பட்ட 30 கிலோ கடல் அட்டை பறிமுதல்

post image

வெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாகையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல் குழும ஏடிஎஸ்பி சிவசங்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையில் காவல் சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் போலீஸாா் நாகை சால்ட் சாலை, புதுத்தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறை பகுதிக்கு சென்றனா்.

அப்போது, போலீஸாா் கண்டவுடன் சிலா் அங்கிருந்து தப்பினா். தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் நடத்திய சோதனையில் 30 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்தி, பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 4 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து, வனத்துறையினா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க