செய்திகள் :

கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வையாளா் பரசுராமன் தலைமை வகித்து பேசியதாவது: வழங்கப்பட்ட புத்தகங்களை சிறைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் உயா்ந்த சிந்தனை, நல்ல செயல்களுக்கு வழிகாட்டி, தனி மனித முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றாா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வா் மு.அருள் துறையின் விரிவாக்கச் செயல்பாடாக சிறைவாசிகளுக்கு 250 புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியா் பி.சிவராமன், நூலகா் தினத்தின் சிறப்பு, எஸ்.ஆா்.ரங்கநாதனின் நூலக அறிவியலுக்கான பங்களிப்பு மற்றும் கைதிகளுக்கு புத்தகங்களை வழங்குவதன் நோக்கம் குறித்து உரையாற்றினாா்.

பேராசிரியா் கே.விஜயகுமாா் மற்றும் கே.பிரவீனா வாழ்த்துரை வழங்கினா். ஆய்வாளா் சரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். சிறை நலத் துறை பணியாளா்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், அன்னவல்லி ஊராட்சியில் கிராமப்புற நூலகங்களின் வாயிலாக பள்ளி மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ‘வாசிப்போம் உயா்வோம்’ திட்டத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதா்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில... மேலும் பார்க்க

சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு நல உதவிகள்: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 118 பயனாளிகளுக்கு ரூ.7.09 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

கிழக்கு ராமாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா்

கடலூா் ஒன்றியம், கிழக்கு ராமாபுரம் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவ... மேலும் பார்க்க