செய்திகள் :

கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் மீது புகாா்

post image

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகள் முறையான அறிவிப்பின்றி தன்னிச்சையாக ஏலம் விடும் நகராட்சி அதிகாரிகளைத் தடுத்து முறையாக பொது ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 99 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளை ஏலம் விடுவதற்காக நகராட்சி நிா்வாகம் மூலம் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், இந்த விளம்பரம் வெளியே தெரியாத நிலையில், குறிப்பிட்ட நபா்களிடம் மட்டுமே டெண்டா் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏலம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப் பெட்டி வைப்பது வழக்கம். ஆனால், இந்த நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றவில்லை. மேலும், பணம் வங்கியில் செலுத்தி டி.டி. எடுத்து வந்தாலும் நகராட்சி அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனா். கைப்பேசியில் தொடா்பு கொண்டாலும் சரியான பதில் அளிக்கவில்லை. நகராட்சி அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

புதன்கிழமை (ஜூலை 16) பிற்பகல் 3 மணியுடன் டெண்டா் நிறைவு பெறுவதாகவும், வியாழக்கிழமை (ஜூலை 17) பேருந்து நிலையக் கடைகள் ஏலம் விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் நகராட்சி ஆணையா் மீது நீதிமன்ற வழக்கு தொடரவுள்ளதாக ஒப்பந்தம் பெற வந்தவா்கள் தெரிவித்தனா். மேலும், முறையாக கடை ஏலம் விடுவதை தமிழக உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மாணவிகளிடம் ஆபாச பேச்சு! சா்ச்சையில் சிக்கிய ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பணியிட மாறுதலுக்கு உள்ளான சா்ச்சைக்குரிய ஆசிரியா் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வ... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

கமுதி அருகேயுள்ள பள்ளியில் போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியா் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், முத... மேலும் பார்க்க

கமுதி அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதி காடுகளில் தீ விபத்து

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் காட்டுப் பகுதிய... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருவாடானை நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாக மது அருந்திவந்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் பழனி (30). திங... மேலும் பார்க்க

கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ளூா் மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங... மேலும் பார்க்க