செய்திகள் :

கட்டாய ராணுவ சேவையை முடித்து வெளிவந்த பிடிஎஸ் பாடகர்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!

post image

தென் கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை முடித்த பிடிஎஸ் பாடகர்கள் வெளிவந்ததை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தென் கொரியாவில் 18-35 வயதுக்குள்ள ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை இருக்கிறது.

தென் கொரியாவில் பிடிஎஸ் என்ற பாடல் குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள்.

இந்த பிடிஎஸ் குழுவில் இருந்து தற்போது வி (கிம் டே-ஹியூங்), ஆர்எம் (கிம் நாம்-ஜூன்) தங்களது 18 மாத ராணுவ சேவையை முடித்து வெளிவந்துள்ளார்கள்.

கடந்த டிச. 2023-இல் இருந்து ராணுவச் சேவையை தொடங்கிய வி, ஆர்எம் தற்போது ஜூனில் முடித்துள்ளார்கள்.

ஆர்எம் 15-ஆவது காலாட்படையிலும் வி எஸ்டீடி எனும் கடினமான சிறப்புப் பிரிவிலும் சேவையை முடித்தார்கள்.

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்எம், “நான் ராணுவத்திலிருந்து விடைபெற்றேன்” எனப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவிலும் பிடிஎஸ் குழுவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Fans wait for arrival of K-pop band BTS members RM and V before they are discharged from a mandatory military service in Chuncheon, South Korea,
பிடிஎஸ் ரசிகர்கள்.

விரைவில் இந்தக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க