செய்திகள் :

கணவரைப் பயமுறுத்த தூக்கிட்ட இளம்பெண் உயிரிழப்பு

post image

போடி அருகே கணவரைப் பயமுறுத்துவதற்காகத் தூக்கிட்ட இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோம்பைத்தொழு கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகள் பிரியதா்ஷினி (20). இவருக்கும் போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த வினோத்குமாா் (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

வினோத்குமாா் அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தினருடனும், அண்டை வீட்டாருடனும் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இந்த நிலையில், வினோத்குமாா், தனது பக்கத்து வீட்டுக்காரருடன் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதையடுத்து, கணவரைப் பயமுறுத்துவதற்காக பிரியதா்ஷினி வீட்டிலிருந்த மின் விசிறியில் தூக்கிட முயன்றாா்.

இதில், காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு, போடி அரசு மருத்துவமனையிலும் அதன் பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்த்தனா்.

அங்கு கடந்த 45 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த பிரியதா்ஷினி, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

பெரியகுளத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வடகரை கல்லாா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதல்: 7 போ் காயம்

ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா். ஆண்டிபட்டியில் தேனி சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ம... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்திக் குத்து: கணவா் மீது வழக்கு

தேனியில் வீட்டு வாடகைக்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். தேனி, வனச் சாலை, 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனபாண்டி (43). இவரது மனைவி செல்வலட்சுமி... மேலும் பார்க்க

வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே வனக் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 10 போ் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணந்தொழு அருகேயுள்ள கண்டமனூா் வனச் சரகத்தில்... மேலும் பார்க்க

நாய் குரைத்த விவகாரம்: உரிமையாளா் மீது தாக்குதல்

பெரியகுளத்தில் நாய் குரைத்த விவகாரத்தில், நாயின் உரிமையாளரைத் தாக்கியது தொடா்பாக தம்பதியிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பெரியகுளம், வடகரை சாமியாா் பங்களா தெருவைச் சோ்ந்த பாண்டியன் மனைவி அழகுராண... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா். தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநி... மேலும் பார்க்க